Thursday, 28 July 2016

அனைத்து வித நச்சுத் தன்மையைப் போக்கும் அவுரிச் செடி



அனைத்து வித நச்சுத் தன்மையைப் போக்கும் அவுரிச் செடி
     
வண்ணான் அவுரி
 பாம்பு கடிக்கு:- அவுரி வேர் ஒன்று அதோடு 21 மிளகு சேர்த்து நன்றாகத் தட்டிப் போட்டு அதில் 200 மில்லி அளவு உள்ள ஆறு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து விரியன் பாம்பு தவிர எந்த பாம்பு கடித்தாலும் மணிக்கொரு தடவை 200 மில்லி வீதம் கொடுத்து வர வேண்டும்.
கடிவாயில் லேசாக பிளேடினால் கீறி பாம்பின் நஞ்சை நீக்க வேண்டும். நான் என் வாயை வைத்து நஞ்சை உருஞ்சி பல பேருக்கு எடுத்திருக்கிறேன்.   வாய்ப்புண் உள்ளவர்களும் அனுபவம் இல்லாதவர்களும் முயற்சிக்க வேண்டாம்.
அதன் பின் அதே அவுரி இலையும் சிறிது மஞ்சளும் சேர்த்தரைத்து ஒரு துணியில் முடிந்து சூடாக கடிவாயில் ஓத்தடம் கொடுக்க வேண்டும். பின் ஒத்தடம் கொடுத்ததையே கடிவாயில் கட்டிவிட வேண்டும்.  இவ்வாறு தினம் இரண்டு வேளை செய்ய வேண்டும். ஒரு வாரத்தில் சரியாகி விடும்.
இதே பக்குவப்படி நாய், தேள், பூனை முதலிய எல்லா வகை விச கடிகளுக்கும் பயன்படுத்த வேண்டும்.
ஆனால் எல்லா வகை விரியன் பாம்பிற்கு அவுரி வேர் மிளகோடு விருசுவிரட்டி வேர் ஒன்று சேர்த்து கசாயம் வைத்துக் கொடுக்க வேண்டும். மற்ற பாம்புகளுக்கு ஏழுநாட்களும் விரியன் வகைப் பாம்புகளுக்கு நாற்பது நாட்களும் சிகிச்சை அளிக்க வேண்டும். ஒரு சில இடங்களில் விரிசு விரட்டி மூலிகைக்கு தரைப்புகையிலை என்றும் நிலக்கடம்பு என்றும் அழைக்கின்றனர்.
பிரம்மஸ்ரீ கோவிந்தன் அவர்கள்



Designed by RoyalCalif Technologies

97887 09295



மஞ்சக் காமாலைக்கு நீலி அவுரி என்னும் வண்ணான் அவுரி


மஞ்சக் காமாலைக்கு  நீலி அவுரி என்னும் வண்ணான் அவுரி


இதற்கு வண்ணான் அவுரி என்றும் நீலி அவுரி என்றும் பெயர்.
மஞ்சள் காமாலை:- இந்த அவுரி இலையை கைப்பிடி அளவு எடுத்து பசுவின் பால் விட்டரைத்து சிறிது பால் விட்டு கலக்கி காலையில் வெறு வயிற்றில் ஒருவேளை கொடுத்து பின் சிறிது அவரி இலை 10 மிளகு சிறிது பால் சேர்த்து அம்மியில் அரைத்து தலையில் அப்பி விடவேண்டும்.
வண்ணான் அவுரி

இவ்வாறு தினம் மூன்று நாட்கள் செய்ய வேண்டும். மூன்ற நாட்களும் குளிக்கக்கூடாது.  நான்காம் நாள் காலையில் ஒமமும் நூறு மில்லி பாலும் சேர்த்து அரைத்து தலையிலிருந்து உடம்பு முழுவதும் தேய்த்து பச்சத் தண்ணீரில் குளிக்க வேண்டும்.
பத்தியம்:- பெரியவர்களுக்கு உப்பில்லாமல் பால் சோறு மட்டும் சாப்பிட்டு வரவும். சிறியவர்களுக்கு எண்ணை பலகாரத்தைத் தவிர்த்தும் எண்ணையில் தாளிக்காத சாம்பாரும் பயன் படுத்த வேண்டாம். பெரியவர்களுக்கு நோயின்தன்மை அதிகரித்து இருந்தால் கரிசலாங்கண்ணிச் சாற்றில் முன்று தடவையும் கீழாநெல்லிச்சாற்றில் மூன்று தடவையும் அரைத்து புடம் போட்ட அன்னபேதிச் செந்தாரமும் கரிசலாங்கண்ணி சூரணமும் சேர்த்து காலையும் மாலையும் கொடுத்து வர விரைவில் குணமாகும்.
  பிரம்மஸ்ரீ கோவிந்தன் அவர்கள்



Designed by RoyalCalif Technologies

97887 09295